states

இந்தியாவின் தற்போதைய சகிப்பின்மை நீண்ட காலம் நீடிக்காது!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பேச்சு

கொல்கத்தா, ஜன.11- இந்தியாவில் தற்போது நிலவும் சகிப் பின்மை நீண்ட காலம் நீடிக்காது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். “பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே உள்ள பயங்கரமான தவறான புரி தல்களை போக்க, ‘நம்பிக்கையை’ கட்டி யெழுப்ப வேண்டியது அவசியம்”; என்றும், “பன்முகத்தன்மையைப் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றும் நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள் ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘பிரதிச்சி அறக்கட்டளை’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமர்த்தியா சென் கலந்து கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசியுள்ளார். 

அப்போது, “நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்றுவது எவ்வாறு?” என ஆசிரியர் ஒரு வர் எழுப்பிய கேள்விக்கு, சுதந்திரப் போராட்  டத்தின் ஆரம்பக் கட்டத்தில், ‘நமக்குள் இருக் கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும்’ என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டதை மேற்  கோள் காட்டிய அமர்த்திய சென், “ஆனால், மற்றவர்களை மதிக்கும் தன்மை தற்போது குறைந்து வருவதாகவும், இந்தியா பின்தங்கு வதற்கு இதுவும் ஒரு காரணம்” என்றும் தெரி வித்துள்ளார். மேலும், நாட்டில் நிலவி வரும் சூழல்  குறித்தும் விரிவாக பேசியிருக்கும் அமர்த்தியா  சென், “இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது. மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நமக் குள் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும்” என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக்  கொண்டுள்ளார்.

“மதங்களுக்கிடையில் பயங்கரமான மற்றும் தவறான புரிதல்களைக் கொண்ட உல கில் நாம் வாழ்கிறோம். இங்கு எல்லா வகை யான வேறுபாடுகளும் உள்ளன. அவற்றில் சில வேறுபாடுகள் கல்வியறிவின்மை மற்றும் அறி யாமையால் வருகின்றன. இது களையப்பட வேண்டும். நமது அண்டை வீட்டாரை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பல்வேறு மதங் களைச் சேர்ந்தவர்களாக உள்ள நமக்கு இடையே உள்ள பயங்கரமான தவறான புரி தல்களை போக்க, ‘நம்பிக்கையை’ கட்டி யெழுப்ப வேண்டியது அவசியம். சிறுபான்மை முஸ்லிம் ஒருவர், வேறுபட்ட பார்வையை எடுத்தால், அவர் ஏன் அந்த வேறு பட்ட பார்வையை கொண்டிருக்கிறார் என்  பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒருவரிட மிருந்து மற்றொருவரின் கருத்துக்கள் மாறு படலாம்.

பள்ளிச் சேர்க்கைக்காக எனது மகள் அந்தா ராவை அழைத்துச் சென்றபோது ஒரு சம்ப வம் நடந்தது. அங்கிருந்த ஆசிரியர் தனது சிவப்பு மற்றும் நீல பென்சில்களைக் காட்டி, வண்ணங்களை அடையாளம் காணுமாறு கூறி னார். பின்னர் நாங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, என் ஐந்து வயது மகள்  அந்தாரா ‘அப்பா, இவருக்கு என்னப் பிரச்  சனை? அவர் நிறக்குருடா?’ என்று கேட்டார்.  இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. அதிலிருந்தே ஆசிரியரிடமிருந்து வந்த கேள்வியை, ஒரு பார்வை மாற்றுத் திறனாளியின் கேள்வியாக என் மகள் அந்தாரா புரிந்து கொண்டார். நம்மிலும் பலர் அப்படியே புரிந்துகொண்டு வெவ்வேறு திசைகளில் செல்கிறோம். எனவே, நாம் எப்போதும் இணைப்பு களைத் தேட வேண்டும். எல்லா நேரங்களிலும் ஒரு தீவிரமான பிரச்சனையில்தான் இணைப்புகளை உருவாக்க வேண்டும் என்ப தில்லை. அற்ப விஷயத்திலும் கூட நம்மால் இணைப்புகளை ஏற்படுத்த முடியும்” என்று அமர்த்தியா சென் கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலா ளர் முகமது சலீமும் கலந்து கொண்டு பேசி னார். அப்போது, “அமர்த்தியா சென், தானொரு உண்மையான சிந்தனையாளர் என வெளிப்  படுத்தியுள்ளார். இது ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களிடமிருந்து இந்தியா கற்றுக் கொண்ட பன்மைத்துவ ஒற்றுமை என்ற பாரம்  பரியத்தின் தீபமாகும்” என்று பாராட்டினார். “அமர்த்தியா சென் கருத்தை வரவேற்கி றோம். மதம், ஜாதி, பாலினம் மற்றும் மொழி யின் அடிப்படையில், பாஜக-வானது ஒட்டு மொத்த நாட்டையும் பிளவுபடுத்தி வருவதை  அமர்த்தியா சென் விமர்சித்துள்ளார்” என்று திரி ணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப் பினர் சுகேந்து சேகர் ராயும் இந்த கருத்தரங்கில் வரவேற்றுள்ளார்.